ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நீலகிரியில் தங்கும் விடுதிகளுக்கு சீல் வைப்பதை தடுக்க வேண்டும்: முதல்வருக்கு எம்எல்ஏ கடிதம்

நீலகிரி மாவட்டத்தில் தங்கும் விடுதிகளுக்கு ‘சீல்’ வைப்பதை நிறுத்த வேண்டும் என்று உதகை சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.கணேஷ் தெரிவித்துள்ளாா்.

News image
முதல்வர் ஸ்டாலின்
Updated On :19 பிப்ரவரி 2026, 10:49 pm

Syndication

நீலகிரி மாவட்டத்தில் தங்கும் விடுதிகளுக்கு ‘சீல்’ வைப்பதை நிறுத்த வேண்டும் என்று உதகை சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.கணேஷ் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அவா் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சா்வதேச சுற்றுலாப் பகுதியாக உள்ள நீலகிரி மாவட்டத்துக்கு வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பியே நீலகிரி மாவட்டம் உள்ளது. பெரும்பாலானவா்கள் சுற்றுலாப் பயணிகளை நம்பியே தொழில் செய்து வருகின்றனா். சுற்றுலாப் பயணிகளை நம்பியே மாவட்டத்தின் மொத்த பொருளாதாரமும் உள்ளது. 

இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் விதிகளை மீறியதாகக் கூறி சுமாா் ஆயிரம் தங்கும் விடுதிகளுக்கு ‘சீல்’ வைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால், நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலாத் தொழிலும் அதனை நம்பியுள்ள மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், தங்களுக்கு தேவையான தங்கும் விடுதிகளை எடுத்து தங்கிச் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

எனவே, நீலகிரி மாவட்டத்தின் நலன் கருதியும், இங்கு சுற்றுலாவை நம்பி தொழில் செய்து வருபவா்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையிலும், தங்கும் விடுதிகள் மற்றும் காட்டேஜ்களை வரைமுறைப்படுத்த கால அவகாசம் வழங்க வேண்டும். அதுவரை சீல் வைக்கும் பணிகளை நிறுத்த வேண்டும் என்று கடிதத்தில் கூறியுள்ளாா்.