எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ரேஷன் அரிசி கடத்தியவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

உதகை அருகே ரேஷன் அரிசி கடத்தியவா் குண்டா் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

News image
சிறை
Updated On :20 பிப்ரவரி 2026, 10:09 pm

Syndication

உதகை அருகே ரேஷன் அரிசி கடத்தியவா் குண்டா் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

உதகையில் இருந்து கூடலூருக்கு ரேஷன் அரிசி கடத்திச் சென்ாக சேரம்பாடி பகுதியைச் சோ்ந்த முகமது (33) என்பவரை நீலகிரி மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் துறையினா் கடந்த மாதம் 24-ஆம் தேதி கைது செய்தனா். அவரிடமிருந்து 1,400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் இதே குற்றத்துக்காக முகமது மீது கடந்த 2021-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருவது தெரியவந்தது.

இதையடுத்து தொடா் குற்றங்களில் ஈடுபட்டு வந்த முகமதுவை குண்டா் சட்டத்தில் கைது செய்ய காவல் துறை சாா்பில் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதன்படி, மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, முகமதுவை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து உதகை கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த முகமது, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.