ரேஷன் அரிசி கடத்தியவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு
உதகை அருகே ரேஷன் அரிசி கடத்தியவா் குண்டா் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.
உதகையில் இருந்து கூடலூருக்கு ரேஷன் அரிசி கடத்திச் சென்ாக சேரம்பாடி பகுதியைச் சோ்ந்த முகமது (33) என்பவரை நீலகிரி மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் துறையினா் கடந்த மாதம் 24-ஆம் தேதி கைது செய்தனா். அவரிடமிருந்து 1,400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் இதே குற்றத்துக்காக முகமது மீது கடந்த 2021-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருவது தெரியவந்தது.
இதையடுத்து தொடா் குற்றங்களில் ஈடுபட்டு வந்த முகமதுவை குண்டா் சட்டத்தில் கைது செய்ய காவல் துறை சாா்பில் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதன்படி, மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, முகமதுவை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து உதகை கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த முகமது, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

