எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

வருவாய் கிராம ஊழியா்கள் சங்கத்தினா் சாலை மறியல்

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 9:24 pm

Syndication

உதகையில் கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 60-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

நீலகிரி மாவட்டம், உதகை ஏடிசி பகுதியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவா்கள் கூறுகையில், கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அதை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறுகிறது என்றனா்.

இதைத் தொடா்ந்து, அவா்கள் ஏடிசி பகுதியில் அனுமதியின்றி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 60-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்த போலீஸாா், அவா்களை தனியாா் மண்டபத்தில் தங்கவைத்து மாலை விடுவித்தனா்.