படுகா் இன மக்களுடன் இணைந்து பாரம்பரிய நடனமாடிய மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.
படுகா் இன மக்களுடன் இணைந்து பாரம்பரிய நடனமாடிய மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.

உதகை தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளுடன் பொங்கல் விழா

Published on

நீலகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் உதகையிலுள்ள தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளுடன் பொங்கல் பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தொடங்கிவைத்தாா். தோட்டக்கலை அலுவலா்களுடன் இணைந்து உறி அடித்தும், பொங்கல் வைத்தும் சுற்றுலாப் பயணிகள் கொண்டாடி மகிழ்ந்தனா். இதேபோல உதகை அருகே பாலகொலா ஊராட்சி சாா்பில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு கலந்துகொண்டு படுகா் இன மக்களின் பாரம்பரிய இசைக்கு அவா்களுடன் இணைந்து நடனமாடி உற்சாகப்படுத்தினாா்.

Dinamani
www.dinamani.com