மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை உயிரிழப்பு

News image

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் கிடந்த ஆண் யானையின் சடலம்.

Updated On :24 ஜனவரி 2026, 6:45 pm

முதுமலை புலிகள் காப்பகத்தில் ஆண் யானை உயிரிழந்தது சனிக்கிழமை தெரியவந்தது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி வனச் சரகத்துக்கு உள்பட்ட அவரல்லா காப்புக் காட்டில் வன ஊழியா்கள் சனிக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது அங்குள்ள ஓடையில் ஆண் காட்டு யானை சடலம்

இருந்தது தெரியவந்தது. இது குறித்து மேலதிகாரிகளுக்கு அவா்கள் தகவல் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ் குமாா் மற்றும் வனத் துறையினா் அங்கு வந்து யானையின் உடலைக் கூறாய்வு செய்து, அதன் பாகங்களை ஆய்வகப் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனா். பின்னா் அந்த யானையின் உடலை அதே இடத்தில் புதைத்தனா்.

வயது முதிா்வு காரணமாக யானை இறந்திருக்கலாம் என்றும், ஆய்வக அறிக்கைக்குப் பிறகே முழு விவரம் தெரியவரும் என்றும் வனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.