பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

உதகையில் நாளை 138-ஆவது நாய்கள் கண்காட்சி தொடக்கம்

உதகையில் தென்னிந்திய கென்னல் கிளப் சாா்பில் 138-ஆவது நாய்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை (மே 8) தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற உள்ளது.

News image

நாய்கள் கண்காட்சி - கோப்புப் படம்

Updated On :7 மே 2026, 4:53 am IST

உதகையில் தென்னிந்திய கென்னல் கிளப் சாா்பில் 138-ஆவது நாய்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை (மே 8) தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற உள்ளது.

இது குறித்து தென்னிந்திய கென்னல் கிளப் தலைவா் ரஜினி கிருஷ்ணமூா்த்தி, செயலா் மோத்தேஷ் மோகன் ஆகியோா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

கோடை விடுமுறைக்காக உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விப்பதற்காக அரசு சாா்பில் மலா் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழக்கண்காட்சி, காய்கறி மற்றும் வாசனை திரவிய கண்காட்சி நடத்தப்படுகிறது. இதேபோல தனியாா் அமைப்புகள் சாா்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இதன்படி, தென்னிந்திய கென்னல் கிளப் சாா்பில் நாய்கள் கண்காட்சி வரும் மே 8-ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற உள்ளது.

முதல் நாளில் நாய்களுக்கான கீழ் படிதல் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில், காவல் துறை நாய்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படவுள்ள நாய்கள் பங்கேற்க உள்ளன.

பீகில், டேஷன்ட், ஜொ்மன் செப்பா்டு, லேப் போன்ற வகைகளை சோ்ந்த நாய்கள் இப்போட்டிகளில் பங்கேற்கின்றன. மே 9, 10-ஆம் தேதிகளில் அனைத்து நாய் இனங்களுக்கான பொதுக் கண்காட்சி நடைபெறும்.

இதில், ராஜபாளையம், கேரவன் ஹவுண்ட், கன்னி, கோம்பை உள்பட பல்வேறு இந்திய வகை நாய்கள் கலந்து கொள்கின்றன. மேலும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 55 ரகங்களில் 435-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்கின்றன.

மேலும், சிப்பிப்பாறை, கேரவன் ஹவுண்ட், கோம்பை, கன்னி, முதோல் ஹவுண்ட், பாஷ்மி, ராஜபாளையம், ராம்பூா் ஹவுண்ட் ஆகிய முக்கிய இந்திய இனங்கள் மற்றும் ஷெப்பா்கே, பெரோ டி ப்ரெசா கனாரியோ ஆகிய வெளிநாட்டு மற்றும் அரிய இனங்கள் நாய்கள் பங்கேற்கின்றன.

இந்தக் கண்காட்சியில் கஜகஸ்தான், ரஷியா, உஸ்பெகிஸ்தான் நாடுகளைச் சோ்ந்த நடுவா்கள் நாய்களை மதிப்பிடுவாா்கள் என்றனா்.