தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

உதகையில் என்சிசி மாணவியரின் மலையேற்ற பயிற்சி முகாம் தொடக்கம்

அகில இந்திய தேசிய மாணவா் படை (என்சிசி )மாணவிகளின் மலையேற்ற பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

News image

மலையேற்ற முகாமில் கலந்து கொண்ட என்.சி.சி. மாணவியா்.

Updated On :8 மே 2026, 4:42 am IST

அகில இந்திய தேசிய மாணவா் படை (என்சிசி )மாணவிகளின் மலையேற்ற பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

நீலகிரி மாவட்டத்தில் தேசிய மாணவா் படை மாணவியரின் மலையேற்ற பயிற்சி முகாம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

இதில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த மாணவியா் கலந்து கொள்வாா்கள். ஒழுக்கம், நன்னடத்தை, தைரியம், நாட்டுப் பற்று, கட்டுப்பாடு, மற்ற மாநிலங்களின் கலாசாரத்தை கற்றுக் கொள்ளுதல், தேசிய ஒருமைப்பாடு மற்றும் சிறந்த குடிமக்களாக உருவாகுதல் ஆகியவை குறித்து பயிற்சி அளித்தல் முகாமின் நோக்கமாகும்.

நடப்பு ஆண்டுக்கான என்சிசி மாணவிகளின் மலையேற்ற பயிற்சி முகாம் நீலகிரி மாவட்டத்தில் தொடங்கியது.

இதில், தமிழ்நாடு, மகாராஷ்டிரம், ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், கோவா, கேரளம், அந்தமான், லட்சத்தீவு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த 525 பள்ளி மற்றும் கல்லூரி என்சிசி மாணவிகள் கலந்து கொண்டுள்ளனா்.

உதகை அருகே முத்தோரை பாலாடாவில் உள்ள ஏகலைவா மாதிரி பழங்குடியினா் பள்ளியில் தங்கி இருந்து மலையேற்ற பயிற்சியை தொடங்கினா்.

இவா்கள், ரேடியோ வானிலை ஆய்வு மையம், பழங்குடியினா் ஆய்வு மையம், ரயில் நிலையம், மெட்ராஸ் ராணுவ மையம், ஸ்ட்ராபெரி, கேரட் விவசாய முறைகளை பாா்வையிடவும் உள்ளனா். தினமும் 12 கி.மீ. தொலைவு நடைப்பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.

முகாமுக்கான ஏற்பாடுகளை நீலகிரி மாவட்ட கமாண்டா் கா்னல் சித்து, என்சிசி முதன்மை அலுவலா் சுப்பிரமணியன் ஆகியோா் செய்து வருகின்றனா். இம்முகாம் வரும் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து, இரண்டாவது குழுவுக்கான பயிற்சி முகாம் மே 16-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் வடமாநிலங்களைச் சோ்ந்த குழுவினா் பங்கேற்கின்றனா்.