தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் தாராபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி தலைமை வகித்தார். நாரணாபுரம் மணி முன்னிலை வகித்தார். உலக அளவில் 108 நாடுகளில் பனை, தென்னை மரங்கள் உள்ளன. இதில் எந்த நாட்டிலும் கள் இறக்கவோ, பருகவோ தடை இல்லை. தமிழகத்தில் மட்டும் கடந்த 30 ஆண்டுகளாக இதற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல. எனவே, மதுக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.