ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

உடுமலையில் கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரம்: 4 டன் பழைய டயர்கள் பறிமுதல்

உடுமலை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. இதையொட்டி, பயனற்ற 4 டன் பழைய டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 4:03 am

DIN

உடுமலை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. இதையொட்டி, பயனற்ற 4 டன் பழைய டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
உடுமலை நகரில் கடந்த சில வாரங்களாக டெங்கு, மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் மர்மக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கொசுவால் ஏற்படும் காய்ச்சல்களைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
வீடுகளில் தேவையில்லாத பொருள்களில் தண்ணீர் தேக்கி வைக்கக் கூடாது எனவும்,  குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பருவ மழை பெய்து வருவதால், உடைந்த பானைகள், தேங்காய் சிரட்டைகள், பாட்டில்கள், டயர்கள் ஆகிவற்றில் தண்ணீர் தேங்குகிறது. இதனால் டெங்கு காய்ச்சலை உ ருவாக்கும் கொசுப் புழுக்கள் பெருகுகின்றன.
எனவே,  நகராட்சி அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் மூலம் விழிப்புணர்வை
ஏற்படுத்தி, தண்ணீர் தேங்கும் தேவையில்லாத பொருள்களை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் உடுமலை நகர்நல அலுவலர் மருத்துவர் கே.சி.அருண் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், பழனி சாலை, தாராபுரம் சாலை, திரு ப்பூர் சாலை, ஏரிப்பாளையம் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பயன்படாத நிலையில் இருந்த 4,000 கிலோ டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.