பல்லடம், பூமலூரில் தனிநபர் இல்ல கழிப்பிடம் தரமற்ற முறையில் கட்டப்படுவதாகக் கூறி அக்கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்லடம் ஒன்றியம், பூமலூர் ஊராட்சி பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், 40 வீடுகளில் தனிநபர் இல்ல கழிப்பிடம்
கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில் தனியார் ஒப்பந்ததாரர் இந்தப் பணிகளை செய்து வருகின்றனர்.
இந்த தனிநபர் இல்லக் கழிப்பிடம் தரமானதாக கட்டப்படவில்லை. தற்போது பெய்த மழையில் பல கழிப்பிடங்கள் சேதமடைந்துள்ளன எனக் கூறி பூமலூர் கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோரிக்கை குறித்து ஊராட்சி செயலாளர் விஜயகுமாரிடம் மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட அவர், இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.