திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கு உடனடியாக புதிய இலவசப் பேருந்துப் பயண அட்டைகளை வழங்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திருப்பூர் கிளை மேலாளருக்கு வாலிபர் சங்கத்தின் திருப்பூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் த.உமாசங்கர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
புதிய கல்வி ஆண்டு தொடங்கப்பட்ட சூழ்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசப் பேருந்து பயண அட்டைகள் இதுவரையில் வழங்கப்படவில்லை. சீருடையில் உள்ள பள்ளி மாணவர்களை பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவை பேருந்து நடத்துநர்களில் பலரும்
கடைப்பிடிப்பதில்லை என்ற புகார் எழத் தொடங்கியுள்ளது. பழைய பேருந்துப் பயண அட்டையைப் பயன்படுத்துவதில் மாணவர்களுக்கு பல்வேறு சிரமங்கள் உள்ளன. எனவே, அரசுப் போக்குவரத்து நிர்வாகம் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு புதிய இலவசப் பேருந்து அட்டைகளை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









