நூலக வார விழா போட்டி: மாணவர்களுக்கு அழைப்பு
உடுமலையில் நடைபெற உள்ள நூலக வார விழா போட்டிகளில் பங்கேற்க மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


உடுமலையில் நடைபெற உள்ள நூலக வார விழா போட்டிகளில் பங்கேற்க மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உடுமலை, தளி சாலையில் உள்ள முதல் கிளை நூலகத்தில் நவம்பர் 14 ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திறனறிப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. 6, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கு மகாகவி பாரதி என்கிற தலைப்பிலும், 9, 10 ஆகிய வகுப்புகளுக்கு நூலகம் ஓர் அறிவுத் திருக்கோவில் என்ற தலைப்பிலும், 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு உலகை மாற்றிய புத்தகங்கள் என்ற தலைப்பிலும் கட்டுரைப் போட்டிகள் நடைபெற உள்ளன.
நவம்பர் 18, ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணி அளவில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் கிளை நூலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். இதில் சிறப்பிடம் பெறுபவர்களுக்கு நவம்பர் 20ஆம் தேதி கிளை நூலகத்தில் நடைபெறும் விழாவில் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...