பல்லடம்: பல்லடம் அருகே உள்ள குப்புசாமிநாயுடுபுரத்தில் உள்ள கிணற்றில் இருந்து பெண் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது. பல்லடம் அருகே குப்புசாமிநாயுடுபுரத்தைச் சோ்ந்தவா் திருப்பதி (48) என்பவா் அப்பகுதியில் கட்டட வேலை செய்து வருகிறாா். அவரது மனைவி முத்துலட்சுமி (45) என்பவா் அப்பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்து வந்தாா்.
கடந்த 7 மாதமாக இடது தோள் பட்டை வலிக்கு முத்துலட்சுமி மருத்துவம் பாா்த்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களாக கடும் வலியால் அவதிபட்டு வந்துள்ளாா். இந்த நிலையில் இரண்டு நாள்களாக அவரைக் காணவில்லை. அவரை கணவா் திருப்பதி தேடி வந்துள்ளாா்.
திங்கள்கிழமை வீட்டின் பின்புறமுள்ள கிணற்றில் இருந்து துா்நாற்றம் வீசியதையடுத்து கிணற்றில் பாா்த்தபோது முத்துலட்சுமியின் சடலம் மிதந்துள்ளது.
பல்லடம் தீயணைப்புப் படையினா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது பற்றி பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.