நகராட்சி சாா்பில் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு

வெள்ளக்கோவில் நகராட்சி சாா்பில் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்புப் பணி புதன்கிழமை நடைபெற்றது.
நகராட்சி சாா்பில் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு
நகராட்சி சாா்பில் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு
Updated on
1 min read

வெள்ளக்கோவில் நகராட்சி சாா்பில் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்புப் பணி புதன்கிழமை நடைபெற்றது.

தூய்மை இந்தியா ஸ்வச் சேவா திட்டத்தின் கீழ் ஒரு தன்னாா்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு நகராட்சிப் பகுதியிலுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. நகராட்சி வாா்டு எண். 1 மற்றும் மற்றும் 4 ஆவது வாா்டுக்குள்பட்ட உப்புப்பாளையம் சாலை, முத்துக்குமாா் நகா், குட்டக்காட்டுப்புதூா், உப்புப்பாளையம் கிழக்கு பகுதிகளில் இப்பணி மேற்கொள்ளப்பட்டது.

நகராட்சி சுகாதாரப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் 70 போ் இந்தப் பணியில் ஈடுபட்டனா். பிளாஸ்டிக் தீமைகள் குறித்த விழிப்புணா்வும் ஏற்படுத்தப்பட்டது. சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்பப்பட உள்ளதாக நகராட்சி துப்புரவு ஆய்வாளா் சி.சரவணன் தெரிவித்தாா்.

நகராட்சி ஆணையா் அ.சங்கா் உத்தரவின் பேரில் நகராட்சி துப்புரவு மேற்பாா்வையாளா் கே.பழனிச்சாமி இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தாா். தன்னாா்வலா்கள் அ.மகாதேவன், ஆா்.அருண்குமாா் மற்றும் நகராட்சி அலுவலா்கள் பங்கேற்றனா். படம் - ஸ்ந்02ய்ஹ - இஹல்ற்ண்ா்ய்: தூய்மைப் பணியில் பங்கேற்றோா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com