பூளவாடி நூலகத்தில் ஏப்ரல் 21 முதல் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள்

உடுமலை வட்டம் பூளவாடி முழு நேர கிளை நூலகத்தில் கோடை விடுமுறையை ஒட்டி மாணவ, மாணவிகளுக்கான பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.
Updated on
1 min read

உடுமலை வட்டம் பூளவாடி முழு நேர கிளை நூலகத்தில் கோடை விடுமுறையை ஒட்டி மாணவ, மாணவிகளுக்கான பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.
இதையொட்டி, பெண்களுக்கான பல்லாங்குழி, தாயம் விளையாட்டுப் போட்டிகள் ஏப்ரல் 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகின்றன. மேலும், இருபாலாருக்குமான சதுரங்கப் போட்டிகள் ஏப்ரல் 22 ஆம் தேதி யும், கேரம் போட்டிகள் ஏப்ரல் 23 ஆம் தேதியும் நடைபெறுகின்றன.
ஏப்ரல் 24 முதல் 30 ஆம் தேதி வரை தனித் திறன்களுக்கானப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் பேச்சு, கட்டுரை, திருக்குறள் ஒப்புவித்தல், கதை சொல்லல், ஓவியம், கையெழுத்துப் போட்டி (தமிழ், ஆங்கிலம்), இசை நாற்காலி ஆகியப் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மேலும்,  போட்டிகளில் பங்கேற்க விரும்பமுள்ள மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். பதிவு செய்ய நூலகத்தை அனுகலாம். தொடர்பு எண்-8807696101.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com