திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 4 பேரை காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.
திருப்பூர், புதுப்பாளையம் டாஸ்மாக் கடை அருகே மதுபானம் விற்பனை செய்ததாக புதுக்கோட்டை மாவட்டம், மணல்மேல்குடியைச் சேர்ந்த கே.மகேந்திரன் (48), போயம்பாளையம் பிரிவு பூலுவபட்டியைச் சேர்ந்த ஆர்.மலைபெருமாள் (49), மதுரை மாவட்டம், மேலன்னதோப்புவைச் சேர்ந்த எம். பாலகிருஷ்ணன்(23), ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனையைச் சேர்ந்த தென்னரசு (20) ஆகிய 5 பேரை திருப்பூர் மது விலக்கு காவல் துறையினர் திங்கள்கிழமை செய்தனர். இவர்களிடமிருந்து ரூ.2 ஆயிரம் ரொக்கம், 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.