திருப்பூர் செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரியில் பென்டா கார்னிவல் கொண்டாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் சாலையில் உள்ள செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரி வணிக மேலாண்மைத் துறை சார்பில் நடைபெற்ற பென்டா கார்னிவல் கொண்டாட்டத்தை கல்லூரி முதல்வர் குழந்தை தெரசா தொடங்கிவைத்தார்.
இந் நிகழ்ச்சியில் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள், ஆடை அலங்காரப் பொருள்கள் விற்பனை மற்றும் சமூக விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டன.
இதில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.