குடும்ப அட்டையில் ஆதார் எண்ணை பதிவு செய்ய 20 இல் சிறப்பு முகாம்

திருப்பூர் மாவட்டத்தில் மின்னணு குடும்ப அட்டையில் ஆதார் எண்ணைப் பதிவு செய்ய சனிக்கிழமை (ஜூலை 20) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் மின்னணு குடும்ப அட்டையில் ஆதார் எண்ணைப் பதிவு செய்ய சனிக்கிழமை (ஜூலை 20) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
 இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
 திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் மின்னணு குடும்ப அட்டையில் ஆதார் எண்ணைப் பதிவு செய்வது தொடர்பாக சனிக்கிழமை காலை 10 முதல் மாலை 6 மணி வரையில் சிறப்பு முகாம்கள்
 நடைபெற உள்ளது. இதுவரை மின்னணு குடும்ப அட்டையில் ஆதார் எண் பதிவு செய்யாத 5 வயதுக்கு உள்பட்ட மற்றும் 5 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் தங்களது குடும்பத்தில் இருப்பின் அசல் ஆதார் அட்டை, அசல் மின்னணு குடும்ப அட்டையை கொண்டுச் சென்று ஆதார் எண்ணைப் பதிவு செய்து கொள்ளலாம்.
 இதுவரை ஆதார் எடுக்காத 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இருப்பின் குழந்தைகளின் அசல் பிறப்புச் சான்று, பெற்றோரின் ஆதார் அட்டையுடனும், 5 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு, பள்ளி மற்றும் கல்லூரிகளில் வழங்கப்பட்ட கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் சென்று புதிய ஆதார் அட்டை எடுத்துப் பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com