ஆசிரியர் தகுதித் தேர்வு மையத்தில் ஆட்சியர் ஆய்வு
By DIN | Published On : 09th June 2019 02:57 AM | Last Updated : 09th June 2019 02:57 AM | அ+அ அ- |

திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான மையத்தை ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் இடைநிலை ஆசிரியர் பதவிக்கான தகுதித் தேர்வு திருப்பூரில் 12 மையங்களில் சனிக்கிழமை (தாள் -1) நடைபெற்றது. பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான தகுதித் தேர்வு 19 தேர்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை ( தாள் - 2) நடைபெறுகிறது.