விபத்தில் பள்ளி மாணவர் பலி

திருப்பூரில் இருசக்கர வாகனம் மரத்தில் மோதியதில் பள்ளி மாணவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.


திருப்பூரில் இருசக்கர வாகனம் மரத்தில் மோதியதில் பள்ளி மாணவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
திருப்பூர் கே.வி.ஆர்.நகரில் செல்லம் நகரைச் சேர்ந்தவர் முத்துராஜா. இவரது மகன்கள் திலிப்குமார் (14), ஆதிநாராயணன் (12). இவர்கள் இருவரும் இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை திலீப்குமாரும், ஆதிநாராயணனும் வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் முருகம்பாளையம்-இடுவம்பாளையம் சாலையில் சென்றுள்ளனர். 
அப்போது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் அருகில் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த ஆதிநாராயணன் திருப்பூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு  உயிரிழந்தார். காயமடைந்த தீலிப்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
இதுகுறித்து வீரபாண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com