தூரி விழுந்து விபத்து: குழந்தை உள்பட இருவர் காயம்
By DIN | Published On : 22nd March 2019 07:34 AM | Last Updated : 22nd March 2019 07:34 AM | அ+அ அ- |

அவிநாசி அருகே உள்ள கருவலூரில் தேர்த் திருவிழாவையொட்டி அமைக்கப்பட்டிருந்த தூரி, வியாழக்கிழமை இரவு கீழே விழுந்ததில் குழந்தை உள்பட இருவர் பலத்த காயமடைந்தனர்.
கருவலூர் மாரியம்மன் கோயில் தேர்திருவிழாவையொட்டி, அப்பகுதியில் ஏராளமான விளையாட்டு தூரிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், தரைமட்ட நாற்காலி தூரியில் 25-க்கும் மேற்பட்டோர் வியாழக்கிழமை இரவு விளையாடினர். இந்நிலையில், திடீரென தூரி பழுதடைந்து, ஒரு நாற்காலி மட்டும் கழன்று கீழே விழுந்தது. இதில் கோவையைச் சேர்ந்த கோபால் (எ) வேணுகோபால், ஒரு குழந்தை ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து அன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து அவிநாசி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...