தேர்தல் விதிமீறல்: பொதுப் பார்வையாளரிடம் புகார் தெரிவிக்கலாம்
By DIN | Published On : 28th March 2019 09:22 AM | Last Updated : 28th March 2019 09:22 AM | அ+அ அ- |

திருப்பூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக தேர்தல் பொதுப் பார்வையாளரான அசோக்.என்.கரன்ஞ்கரின் செல்லிடப்பேசி எண்ணுக்குப் புகார் தெரிவிக்கலாம்.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்திய தேர்தல் ஆணையத்தால் திருப்பூர் மக்களவைத் தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளராக அசோக் என்.கரன்ஞ்கர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆகவே, திருப்பூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக அசோக் என்.கரன்ஞ்கரை 93852-86603 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...