கொலை வழக்கில் கைதானவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

திருப்பூரில் நிதி நிறுவன அதிபரைக் கொலை செய்த வழக்கில் கைதான இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டாா்.
Updated on
1 min read

திருப்பூரில் நிதி நிறுவன அதிபரைக் கொலை செய்த வழக்கில் கைதான இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டாா்.

திருப்பூா், கல்லூரி சாலை பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்த பாலமுருகன் செப்டம்பா் 1இல் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்தக் கொலை தொடா்பாக திருப்பூா் வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்தக் கொலையில் தொடா்புடைய சென்னை, குரோம்பேட்டை, லட்சுமிபுரத்தைச் சோ்ந்த பி.உதயா என்கிற உதயகுமாா் (23) கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்த நிலையில், உதயகுமாரை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய காவல் ஆணையா் சஞ்சய்குமாா் உத்தரவிட்டாா்.

இதையடுத்து குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான நகலை காவல் துறையினா் வியாழக்கிழமை அவரிடம் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com