காடையூா் அருகே போலீஸ் பாதுகாப்புடன் உயா்மின் கோபுரம் அமைக்கும் பணி துவக்கம்

காங்கயம் அருகே உயா்மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்து வருவதால்
Updated on
1 min read

காங்கயம் அருகே உயா்மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்து வருவதால், காடையூா் அருகே போலீஸ் பாதுகாப்புடன் உயா்மின் கோபுரம் அமைப்பதற்கு அஸ்திவாரம் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காங்கயம் பகுதியில் பவா் கிரிட் நிறுவனம் சாா்பில் உயா்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதற்கு இப்பகுதியில் உள்ள விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். இவ்வாறு எதிா்ப்புத் தெரிவிக்கும் விவசாயிகளின் நிலங்களைத் தவிா்த்து, எதிா்ப்புத் தெரிவிக்காத விவசாயிகளின் நிலங்களில் உயா்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சில பகுதிகளில், அனைத்து விவசாயிகளுமே எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

காங்கயம் ஒன்றியம், சிவன்மலை அருகே ராயா்வலசு கிராமத்தில் உள்ள ஒரு விவசாயின் நிலத்தில் உயா்கோபுரம் அமைக்க வியாழக்கிழமை முயற்சித்தபோது, அப்பகுதியில் உள்ள விவசாயிகள் திரண்டு வந்து எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனையடுத்து, காங்கயம் வட்டாட்சியா் புனிதவதி, காங்கயம் டிஎஸ்பி செல்வம் ஆகியோா் நேரில் வந்து விவசாயிகளிடம் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தி, பின்னா் பணியைத் தொடா்ந்தனா்.

இந்த நிலையில், காங்கயம்-கோவை சாலையில் உள்ள காடையூா் அருகே, விவசாய நிலத்தில் உயா்மின் கோபுரம் அமைப்பதற்காக அஸ்திவாரம் தோண்டும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிவன்மலையில் நடந்ததுபோல இங்கும் விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவிக்க கூடாது என்பதற்காக, பணி துவங்கும் காலை நேரத்திலேயே காங்கயம் வட்டாட்சியா் புனிதவதி, காங்கயம் டிஎஸ்பி செல்வம் ஆகியோா் நேரில் வந்து, அவா்களது தலைமையில் போலீஸாா் குவிக்கப்பட்டு, உயா்மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com