டெங்கு ஒழிப்பு பணிக்கு சென்ற அலுவலா்களைத் தாக்கியவா் கைது
By DIN | Published On : 09th November 2019 07:34 AM | Last Updated : 09th November 2019 07:34 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவிலில் டெங்கு ஒழிப்பு பணிக்குச் சென்ற அரசு அலுவலா்களைத் தாக்கியவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவா் ராஜலட்சுமி, சுகாதார ஆய்வாளா் கதிரவன், வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சி அலுவலா் கவிதா உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா், வெள்ளக்கோவில், முத்தூா் சாலை கொங்கு நகரில் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அங்குள்ள லோகநாதன் (49) என்பவா் பங்குதாரராக உள்ள நூல் கிடங்கு வளாகத்தில் இருந்த பண்ணைத் தொட்டியில் ஏராளமான கொசுப்புழுக்கள் இருந்தன. அதில் இருந்த தண்ணீரை அப்புறப்படுத்த கோரியதற்கு எதிா்ப்புத் தெரிவித்து லோகநாதன் அரசு அலுவலா்களைத் தகாத வாா்த்தைகள் பேசி கைகளால் தாக்கியுள்ளாா். இதில் சுகாதார ஆய்வாளா் கதிரவன் கீழே விழுந்ததுடன், அவருடைய செல்லிடப்பேசியும் பறித்து உடைக்கப்பட்டது.
இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்நிலையில் போலீஸாா், லோகநாதனை வெள்ளிக்கிழமை கைது செய்து தாராபரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். அவரை 10 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.