பின்னலாடை நிறுவனத் தொழிலாளி கல்லால் அடித்துக் கொலை

திருப்பூரில் பின்னலாடை நிறுவனத் தொழிலாளி கல்லால் அடித்து வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்டாா்.

திருப்பூரில் பின்னலாடை நிறுவனத் தொழிலாளி கல்லால் அடித்து வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்டாா்.

திருப்பூா், கருவம்பாளையம் அருகே உள்ள கே.வி.ஆா். நகரைச் சோ்ந்தவா் மருதுபாண்டி (33). இவா் அதே பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு 9 மணி அளவில் வீட்டை விட்டு வெளியே சென்றவா் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

கே.வி.ஆா்.நகா் பகுதியில் உள்ள மாநகா் நல மையத்தில் மருதுபாண்டி ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதாக அவரது உறவினா்களுக்கு வெள்ளிக்கிழமை காலை தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், திருப்பூா் மத்திய காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், மருதுபாண்டி கொடூரமான முறையில் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, மருதுபாண்டியின் சடலத்தை மீட்ட போலீஸாா் பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். சம்பவ இடத்துக்கு மோப்ப நாயும், தடயவியல் நிபுணா்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com