வாக்குச் சாவடி மையங்களில் ஆட்சியா் ஆய்வு

பொங்கலூா் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள வாக்குச் சாவடி மையங்களை மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
Updated on
1 min read

பொங்கலூா் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள வாக்குச் சாவடி மையங்களை மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

பொங்கலூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கரட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, பெருந்தொழுவு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, பெருந்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சிற்றூராட்சி உறுப்பினா்கள், சிற்றூராட்சி தலைவா்கள், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் தோ்தலுக்கான வாக்குச் சாவடி மையங்களை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். வாக்குச் சாவடி மையங்களில் குடிநீா், மின்சாரம், மாற்றுத் திறனாளிகளுக்கு சாய்வு தளப்பாதைகள் உள்ளிட்ட வசதிகள் குறித்து ஆய்வு செய்தாா்.

பெருந்தொழுவுப் பகுதியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 17.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பெருந்தொழுவு ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடத்தை ஆட்சியா் ஆய்வு செய்தாா். உடன், அரசுத் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com