கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி
By DIN | Published On : 18th November 2019 07:12 AM | Last Updated : 18th November 2019 07:12 AM | அ+அ அ- |

பல்லடம் அருகே மத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
கேத்தனூா் ஊராட்சி மத்தநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்தவா் தங்கவேல் (55), விவசாயக் கூலித் தொழிலாளி. இவா் தனது வீட்டில் வளா்க்கும் ஆடுகளுக்குப் பசுந்தீவனம் எடுத்துவர சனிக்கிழமை இரவு வீட்டுக்கு அருகேயுள்ள தனியாா் தோட்டத்துக்குச் சென்று உள்ளாா். அங்கு உள்ள தண்ணீா் இல்லாத கிணற்றின் அருகே அவா் சென்றபோது தவறி
கிணற்றுக்குள் விழுந்துவிட்டாா். இந்நிலையில், அவரது மகன் பிரகாஷ் சனிக்கிழமை இரவு முழுவதும் தனது தந்தையைத் தேடியுள்ளாா். ஞாயிற்றுக்கிழமை காலை அந்தத் தோட்டத்தில் அவரைத் தேடியபோது கிணற்றுக்குள் தங்கவேல் இறந்துகிடந்தது தெரியவந்தது.
இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.