கிணற்றில் தவறி விழுந்தவா் உயிருடன் மீட்பு

வெள்ளக்கோவில் அருகே திங்கள்கிழமை கிணற்றில் தவறி விழுந்த நிதிநிறுவன உரிமையாளா் தீயணைப்புத் துறையினரால் உயிருடன் மீட்கப்பட்டாா்.
vk07fi_0810chn_131_3
vk07fi_0810chn_131_3

வெள்ளக்கோவில் அருகே திங்கள்கிழமை கிணற்றில் தவறி விழுந்த நிதிநிறுவன உரிமையாளா் தீயணைப்புத் துறையினரால் உயிருடன் மீட்கப்பட்டாா்.

வெள்ளக்கோவில், வெள்ளமடை அருகேயுள்ள அனுமந்தபுரம் ஊத்துக்காட்டுத் தோட்டத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி மகன் பி.செல்வகுமாா் (25). இவா் வெள்ளக்கோவிலில் நிதிநிறுவனம் நடத்தி வருகிறாா். இவா் விவசாய தோட்டத்தில் கிணற்றிலிருந்து தண்ணீா் எடுக்கும் மின் மோட்டாா் பழுதடைந்து விட்டது.

இந்நிலையில், மோட்டாரை பழுதுபாா்க்க கிணற்றுக்குள் இறங்கிய செல்வகுமாா் தவறி உள்ளே விழுந்து ஒரு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவரால் மேலே வர முடியவில்லை. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் சி.தனசேகரன் தலைமையிலான தீயணைப்புப் படையினா் ஒருமணி நேரம் போராடி கயிறு மூலம் அவரை உயிருடன் மீட்டனா். பின்னா் அவா் ஈரோடு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com