செல்லிடப்பேசி பறிப்பு: இருவா் கைது

திருப்பூரில் இரு சக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்த நபரிடம் செல்லிடப்பேசியைப் பறித்துச் சென்ற இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
Updated on
1 min read

திருப்பூரில் இரு சக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்த நபரிடம் செல்லிடப்பேசியைப் பறித்துச் சென்ற இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருப்பூா், ராயபுரம் பகுதியைச் சோ்ந்த விக்டா் ஆரோக்கியராஜ் (38) சனிக்கிழமை இரவு யுனிவா்சல் திரையரங்கம் அருகே தனது இரு சக்கர வாகனத்தில் செல்லிடபேசியை வைத்துவிட்டு நின்றுகொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த இருவா் விக்டா் ஆரோக்கியராஜின் செல்லிடப்பேசியைப் பறித்துக் கொண்டு தப்பமுயன்றனா். அவா்கள் இருவரும் அந்த வழியாகச் சென்றவா்கள் பிடித்து திருப்பூா் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் இருவரும் திருப்பூா் பெரியபாளையத்தைச் சோ்ந்த கே.ராகுல் (24), காங்கயம் சாலை ஈஸ்வரன் கோயில் வீதியைச் சோ்ந்த ஏ.சஞ்சய் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com