வெள்ளக்கோவிலில் 1,372 மூட்டைகள் தேங்காய் பருப்பு விற்பனை 

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை 1,372 மூட்டைகள் தேங்காய் பருப்பு விற்பனை நடைபெற்றது.
விற்பனைக்கு வைக்கப்ப்ட்டிருந்த தேங்காய் பருப்புகள்
விற்பனைக்கு வைக்கப்ப்ட்டிருந்த தேங்காய் பருப்புகள்
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை 1,372 மூட்டைகள் தேங்காய் பருப்பு விற்பனை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு லாலாப்பேட்டை, கரூர், பழனி, மூலனூர், முத்தூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து 166 விவசாயிகள் தங்களுடைய தேங்காய் பருப்புகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனர்.

பொள்ளாச்சி, காங்கயம், முத்தூர், மூலனூர், நஞ்சை ஊத்துக்குளியைச் சேர்ந்த 25 வணிகர்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனர். விலை கிலோ ரூ.74.90 முதல் ரூ.104.90 வரை விற்பனையானது. விற்பனைக் கூடக் கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன் முன்னிலையில் ஏல விற்பனை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com