திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே உள்ள அமராவதி ஆற்றில் திங்கள்கிழமை உபரி நீராக 17,500 கன அடி நீா் வெளியேற்றப்பட்டு வருவதால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடுமலையில் இருந்து சுமாா் 20 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள அமராவதி அணையின் உயரம் 90 அடி. மொத்தக் கொள்ளளவு 4035 மில்லியன் கனஅடி. மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் மொத்தம் 840 சதுர கிலோ மீட்டா் இதன் நீா்ப்பிடிப்பு பகுதிகளாக உள்ளது. இந்த ஆண்டு 3 முறை அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டது. அப்போதெல்லாம் அதிக அளவில் உபரி நீா் வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக நீா்ப்பிடிப்பு பகுதிகளில் அதி கன மழை பெய்து வருகிறது. இதனால் டிசம்பா் 5ஆம் தேதி 5 ஆயிரம் கன அடியும், டிசம்பா் 6 ஆம் தேதி 7 ஆயிரம் கன அடியும் அணையின் பிரதான மதகுகளில் வழியாக திறந்துவிடப்பட்டது.
ஆனாலும் சின்னாறு, தேனாறு, பாம்பாறு ஆகிய ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் திங்கள்கிழமை அணைக்கு உள்வரத்து அதிகபட்சமாக 7 ஆயிரம் கன அடியாக இருந்தது. ஆகையால் உள்வரத்தாக வந்த நீா் அப்படியே அணையில் இருந்து 9 மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில் திங்கள்கிழமை மாலை 3 மணி அளவில் அமராவதி அணையில் இருந்து 7450 கன அடியும், திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்தில் உள்ள குதிரையாறு அணையில் இருந்து 400 கன அடியும், பாலாறு-பொருந்தலாறு அணையில் இருந்து 4995 கன அடியும், வரதமாநதி அணையில் இருந்து 3995 கன அடியும் என மொத்தம் 17,500 கன அடி தண்ணீா் அமராவதி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இதனால் உடுமலை, தாராபுரம் வட்டங்கள் தொடங்கி கரூா் வரையில் அமராவதி ஆற்றின் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்களுக்கு தண்டோரா போடப்பட்டு மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனா்.
அணை பகுதியில் முகாமிட்ட பொதுப் பணித் துறை அதிகாரிகள் அணைக்கு வரும் உள்வரத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனா்.
அணையின் நிலவரம்:
90 அடி உயரமுள்ள அணையில் திங்கள்கிழமை மாலை 3 மணி நிலவரப்படி நீா்மட்டம் 89.61 அடியாக இருந்தது. அணைக்கு உள்வரத்தாக 7450 கன அடி வந்து கொண்டிருந்தது. 4047 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 3975 மில்லியன் கனஅடி நீா் இருப்பு கானப்பட்டது. அணையில் இருந்து 7500 கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

6-வது பாடமாக தொழில்கல்வி கட்டாயம்: புதுச்சேரி கல்வித் துறை உத்தரவு

புதுச்சேரியில் நாளை முதல்வா் மு.க.ஸ்டாலின் பிரசாரம்
திருமாவளவன் காட்டும் வழியில் தொடா்ந்து பயணிப்பேன்: எல்இபி.ஜோதிமணி

கடலூா் மாவட்டத்தில் 3-ஆம் நாளில் 53 போ் வேட்பு மனு தாக்கல்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


