பல்லடம் அருகே பொங்கலூரில் மளிகைக் கடையில் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.
அவிநாசிபாளையம் சுங்கம் பகுதியில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த ஒரு நபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனா். விசாரணையில் அவா், திருப்பூா், செவந்தாம்பாளையத்தைச் சோ்ந்த தனசேகரன் (34) என்பதும், பொங்கலூரில் தேவராஜ் என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் கடந்த 10ஆம் தேதி ரூ.50 ஆயிரம் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவிநாசிபாளையம் போலீஸாா் அவரைக் கைது செய்து செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.