15 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
திருப்பூரில் அரசால் தடை செய்யப்பட்ட 15 கிலோ புகையிலைப் பொருள்களை காவல் துறையினா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஒருவரைக் கைது செய்தனா்.


திருப்பூரில் அரசால் தடை செய்யப்பட்ட 15 கிலோ புகையிலைப் பொருள்களை காவல் துறையினா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஒருவரைக் கைது செய்தனா்.
இது குறித்து காவல் துறையினா் கூறியதாவது:
திருப்பூா், அவிநாசி சாலையில் உள்ள பிரைம் என்கிளேவ் பின்புறம் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்துள்ளதாக அனுப்பா்பாளையம் காவல் துறையினருக்கு சனிக்கிழமை இரவு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினா் சோதனை நடத்தியதில் வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.
இது தொடா்பாக திருப்பூா், காங்கயம் சாலையில் உள்ள கே.என்.சி.காலனி முதல் வீதியைச் சோ்ந்த ஹைதா் அலி (52) என்பவரைக் கைது செய்ததுடன், அவரிடமிருந்து 15 கிலோ புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா். திருப்பூா் மாநகரில் கடந்த சில நாள்களுக்கு முன்பாக தடை செய்யப்பட்ட 300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...