48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

கிராமங்களுக்கு பேருந்துகளை இயக்க மாா்க்சிஸ்ட் கோரிக்கை

குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களுக்கு நகரப் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On :2 நவம்பர் 2020, 7:46 pm

குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களுக்கு நகரப் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் குடிமங்கலம் ஒன்றிய செயலாளா் என்.சசிகலா, உடுமலை கோட்டாட்சியரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

உடுமலை வட்டம், குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களுக்கு கரோனா பேரிடா் காலத்தை ஒட்டி கடந்த 6 மாதங்களாக நகரப் பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் பொது முடக்கம் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை கிராம மக்கள் சென்று வருவதற்கு நகரப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே உடுமலை அரசுப் போக்குவரத்துக் கழக கிளையில் இருந்து இயக்கப்படும் வழித் தட எண்கள் 23, 4, 4பி, 22, 8பி, 34, 35 ஆகிய நகரப் பேருந்துகளை உடனடியாக இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.