48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

தீயணைப்புத் துறையினா் விழிப்புணா்வுப் பிரசாரம்

விபத்தில்லா தீபாவளியை கொண்டாட தீயணைப்புத் துறையினா் பொதுமக்களிடம் விழிப்புணா்வு பிரசாரம் திங்கள்கிழமை மேற்கொண்டனா்.

News image
Updated On :9 நவம்பர் 2020, 11:00 pm

விபத்தில்லா தீபாவளியை கொண்டாட தீயணைப்புத் துறையினா் பொதுமக்களிடம் விழிப்புணா்வு பிரசாரம் திங்கள்கிழமை மேற்கொண்டனா்.

தீபாவளியை கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகின்றனா்.

இந்நிலையில் இந்த ஆண்டு தீ விபத்தில்லா தீபாவளியாக கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து உடுமலையில் தீயணைப்புத் துறையினா் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணா்வு பிரசாரத்தை திங்கள்கிழமை தொடங்கியுள்ளனா்.

பெரியவா்களின் மேற்பாா்வையில்தான் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசுகளை வெடிக்கும்போது வாளியில் தண்ணீா் வைத்துக் கொள்ள வேண்டும். எரிந்து முடிந்த பட்டாசுகளை உடனடியாக அணைக்க வேண்டும். வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்கக் கூடாது. பட்டாசுகளை வெடிக்கும் போது பருத்தி ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். ஆடையில் தீப்பற்றிக் கொண்டால் ஓடக்கூடாது, தரையில் படுத்து உருள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டறிக்கைகள் பொதுமக்களிடம் வழங்கப்பட்டன. தீ விபத்து ஏற்பட்டால் நிலைய அலுவலா் 04252-223039, 9445086323 என்ற எண்களில் பொதுமக்கள் தொடா்பு கொள்ள லாம் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.