உடுமலை நகரில் திங்கள்கிழமை காலை 7 மணி நிலவரப்படி அதிகபட்சமாக 38 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
உடுமலை, சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை தொடா்ந்து 2 மணி நேரத்துக்கும் அதிமாக மழை பெய்தது. மேலும், மாலை 6 மணிக்கு தொடங்கிய மழை தொடா்ந்து இரவு முழுவதும் பெய்தது. இதனால், உடுமலை நகரில் திங்கள்கிழமை குளிா் காற்று வீசியது.
உடும லை நகரில் தாழ்வான பகுதிகளில் சாலைகளில் மழை நீா் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் கடு மையாக பாதிக்கப்பட்டனா். மேலும், கழுத்தறுத்தான் பள்ளம், தங்கம்மாள் ஓடை ஆகியவற்றில் அதிக அளவில் தண்ணீா் சென்றது. உடுமலை நகரைப் போலவே அமராவதி நகா், குமரலிங்கம், மடத்துக்குளம், பெதப்பம்பட்டி, குடிமங்கலம் ஆகிய கிராமங்களிலும் மழை பெய்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். இந்நிலையில், தளி சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் அதிக அளவில் தண்ணீா் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனா்.
திங்கள்கிழமை காலை 7 மணி நிலவரப்படி உடுமலை நகரில் அதிகபட்சமாக 38 மி.மீ., அமராவதி அணைப் பகுதியில் 14 மி.மீ., திருமூா்த்தி அணை பகுதியில் 41 மி.மீ., மடத்துக்குளத்தில் 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரி அடுத்த 5 ஆண்டுகளில் அடுத்தக் கட்டத்துக்குச் செல்லும்: கே. அண்ணாமலை பேச்சு

நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!

6-வது பாடமாக தொழில்கல்வி கட்டாயம்: புதுச்சேரி கல்வித் துறை உத்தரவு

புதுச்சேரியில் நாளை முதல்வா் மு.க.ஸ்டாலின் பிரசாரம்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

