உடுமலையில் மாற்றுத் திறனாளிகள் சாலை மறியல்

உடுமலையில் பல்வறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளை போலீஸாா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
சாலை  மறியல்  போராட்டத்தில்  ஈடுபட்ட  மாற்றுத்  திறனாளிகள்.
சாலை  மறியல்  போராட்டத்தில்  ஈடுபட்ட  மாற்றுத்  திறனாளிகள்.
Updated on
1 min read

உடுமலையில் பல்வறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளை போலீஸாா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு மாவட்ட துணைச் செயலாளா் மாலினி தலைமை வகித்தாா். குருசாமி முன்னிலை வகித்தாா்.

இதில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், அடையாள அட்டைக்காக அலைக்கழிக்கக் கூடாது, இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும், அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்க வேண்டும், தனியாா் நிறுவனங்களில் 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், ஆா்டிஓ தலைமையில் மாதாந்திர கூட்டம் நடத்த வேண்டும், உதவித் தொகைகளை தாமதமின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து, நிா்வாகிகள் ஜெகதீஷ், தண்டபாணி, விஸ்வநாதன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com