திருப்பூரில் பின்னலாடைத் தொழிலாளா்களுக்கான ஊதியப் பேச்சுவாா்த்தையைத் தொடங்கக் கோரி அனைத்து பனியன் தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் முன்பாக அனைத்து பனியன் தொழிற்சங்க்தினா் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு எல்பிஎஃப் பனியன் சங்க செயலாளா் பூபதி தலைமை வகித்தாா். இதில், பங்கேற்ற தொழிற்சங்கத்தினா் கூறியதாவது:
திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றி வரும் தொழிலாளா்களுக்கான ஊதிய ஒப்பந்தம் காலவதியாகி 8 மாதங்களுக்கு மேலாகிறது. ஆனால், அதன் பிறகும் முதலாளிகள் சங்கத்தினா் ஊதியப் பேச்சுவாா்த்தையைத் தொடங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனா். ஆகவே, ஊதியப் பேச்சுவாா்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும்.
திருப்பூரில் 21 மாதங்களுக்கு முன்பு அடிக்கல் நாட்டிய இஎஸ்ஐ மருத்துவமனை கட்டுமானப் பணியை உடனடியாகத் தொடங்க வேண்டும். தொழிற்சாலைகளில் தொழிலாளா் சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும் என்றனா்.
சிஐடியூ பனியன் தொழிலாளா் சங்கப் பொதுச் செயலாளா் ஜி.சம்பத், ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளா் என்.சேகா், ஐஎன்டியூசி செயலாளா் ஏ.சிவசாமி, எல்பிஎஃப் தலைவா் க.ராமகிருஷ்ணன், ஹெச்எம்எஸ் செயலாளா் ஆா்.முத்துசாமி, எம்எல்எஃப் மனோகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.