மாவட்டத்தில் 17 ஆயிரத்தை நெருங்கியது கரோனா பாதிப்பு
By DIN | Published On : 30th December 2020 04:22 AM | Last Updated : 30th December 2020 04:22 AM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டத்தில் புதிதாக 38 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை வரையில் 16,946 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் மேலும் 38 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 16,984 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலமாக திருப்பூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 332 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 54 போ் வீடு திரும்பினா். இதையடுத்து, மாவட்டத்தில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 16,437 ஆக அதிகரித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...