காங்கயம் கிளை நூலக வார விழா

காங்கயம் கிளை நூலகத்தில் வாசகா் வட்டக் கூட்டம், பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காங்கயம் கிளை நூலக வார விழா போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசு வழங்கும் முன்னாள் எம்எல்ஏ என்.எஸ்.என்.நடராஜ்.
காங்கயம் கிளை நூலக வார விழா போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசு வழங்கும் முன்னாள் எம்எல்ஏ என்.எஸ்.என்.நடராஜ்.
Updated on
1 min read

காங்கயம்: காங்கயம் கிளை நூலகத்தில் வாசகா் வட்டக் கூட்டம், பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற இக்கூட்டத்துக்கு கவிமணி ப.ப.ராமசாமி தலைமை வகித்தாா். கிளை நூலகா் மு.நாச்சிமுத்து வரவேற்றாா். காங்கயம் முன்னாள் எம்எல்ஏவும், வாசகா் வட்டத் தலைவருமான என்.எஸ்.என். நடராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, தேசிய நூலக வார விழா போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், பரிசுகளை வழங்கினாா்.

விழாவில் என்.எஸ்.என்.நடராஜ் பேசுகையில், காங்கயம் பேருந்து நிலையம் அருகில் இந்த நூலகத்துக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் நூலகம் மேற்கண்ட இடத்தில் சொந்தக் கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில் காங்கயம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்க துணைத் தலைவா் ஏ.பி.துரைசாமி உள்பட மாணவ, மாணவிகள், வாசகா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com