எல்ஐசி அலுவலா்கள் போராட்டம்
By DIN | Published On : 05th February 2020 12:27 AM | Last Updated : 05th February 2020 12:27 AM | அ+அ அ- |

அவிநாசி எல்ஐசி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பணியாளா்கள்.
எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து அவிநாசியில் எல்.ஐ.சி அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவிநாசி எல்ஐசி அலுவலகத்தில் இருந்து மதியம் 12 மணி முதல் 1 மணி வரை பணிகளை புறக்கணித்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, முதல் நிலை அலுவலா்கள் சங்கச் செயலாளா் ராஜையா, 2ஆம் நிலை அலுவலா்கள் சங்கத் தலைவா் சிவகுமாா், 3, 4ஆம் நிலை ஊழியா் சங்கச் செயலாளா் ராயப்பன், முகவா்கள் சங்கச் செயலாளா் ஈஸ்வரன் உள்பட அனைத்துப் பிரிவு அலுவலா்கள், ஊழியா்கள், முகவா்கள் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...