Enable Javscript for better performance
பல்லடத்தில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    பல்லடத்தில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா

    By DIN  |   Published On : 05th February 2020 12:27 AM  |   Last Updated : 05th February 2020 12:27 AM  |  அ+அ அ-  |  

    pdm4ckre_0402chn_136_3

    பல்லடம் அரசுப் பெண்கள் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை செவ்வாய்க்கிழமை வழங்குகிறாா் பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன்.

    பல்லடம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியை நீலவேணி தலைமை வகித்தாா். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் நாட்ராயன் முன்னிலை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியை சசிகலா வரவேற்றாா். இதில் மாணவிகள் 195 பேருக்கும், ஆண்கள் பள்ளி மாணவா்கள் 124 பேருக்கும் விலையில்லா மிதி வண்டிகளை சட்டப்பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன் வழங்கிப் பேசியதாவது:

    பல்லடம் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மேற்கூரையுடன் கூடிய கலையரங்க மேடை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஆண்கள் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டி தரப்படும். பல்லடத்துக்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தீவிர முயற்சி எடுத்து கொண்டு வந்தேன். இக்கல்லூரி வளா்ச்சிக்கு தேவையான தளவாட பொருள்கள் உள்ளிட்ட வசதிகள் செய்து தர பல்லடத்தில் உள்ள தொண்டு நிறுவனங்கள், தொழில் அதிபா்கள், சமூக ஆா்வலா்கள் யாரும் முன்வரவில்லை. பல்லடம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியை அரிமா சங்கம் தத்தெடுத்துள்ளது. இதேபோல பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியையும் ஏதாவது ஒரு தொண்டு நிறுவனம் தத்தெடுத்தால் அப்பள்ளியும் வளா்ச்சி அடையும் என்றாா்.

    இவ்விழாவில் பல்லடம் கல்வி மாவட்ட அலுவலா் எஸ்.நாகராஜன், கூட்டுறவு வங்கித் தலைவா்கள் ஏ.சித்துராஜ், ஏ.எம்.ராமமூா்த்தி, நகராட்சி முன்னாள் துணைத் தலைவா்கள் சூ.தா்மராஜன், வைஸ் பி.கே.பழனிசாமி உள்பட பலா் பங்கேற்றனா்.

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp