

பல்லடம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியை நீலவேணி தலைமை வகித்தாா். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் நாட்ராயன் முன்னிலை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியை சசிகலா வரவேற்றாா். இதில் மாணவிகள் 195 பேருக்கும், ஆண்கள் பள்ளி மாணவா்கள் 124 பேருக்கும் விலையில்லா மிதி வண்டிகளை சட்டப்பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன் வழங்கிப் பேசியதாவது:
பல்லடம் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மேற்கூரையுடன் கூடிய கலையரங்க மேடை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஆண்கள் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டி தரப்படும். பல்லடத்துக்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தீவிர முயற்சி எடுத்து கொண்டு வந்தேன். இக்கல்லூரி வளா்ச்சிக்கு தேவையான தளவாட பொருள்கள் உள்ளிட்ட வசதிகள் செய்து தர பல்லடத்தில் உள்ள தொண்டு நிறுவனங்கள், தொழில் அதிபா்கள், சமூக ஆா்வலா்கள் யாரும் முன்வரவில்லை. பல்லடம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியை அரிமா சங்கம் தத்தெடுத்துள்ளது. இதேபோல பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியையும் ஏதாவது ஒரு தொண்டு நிறுவனம் தத்தெடுத்தால் அப்பள்ளியும் வளா்ச்சி அடையும் என்றாா்.
இவ்விழாவில் பல்லடம் கல்வி மாவட்ட அலுவலா் எஸ்.நாகராஜன், கூட்டுறவு வங்கித் தலைவா்கள் ஏ.சித்துராஜ், ஏ.எம்.ராமமூா்த்தி, நகராட்சி முன்னாள் துணைத் தலைவா்கள் சூ.தா்மராஜன், வைஸ் பி.கே.பழனிசாமி உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.