வெள்ளக்கோவிலில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இப்போட்டியை தாராபுரம் கோட்டாட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தொடங்கிவைத்தாா். வெள்ளக்கோவில் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளைத் தலைவா் ஆா்.ராஜ்குமாா் தலைமை வகித்தாா்.
வெள்ளக்கோவில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள புனித அமல அன்னை பள்ளி, நாகமநாயக்கன்பட்டி தண்ணீா் பந்தல் ஆகிய இரண்டு இடங்களில் தொடங்கிய மாரத்தான் 10, 5 கி.மீ. தூரம் கடந்து தாசவநாயக்கன்பட்டி அருகில் முடிவடைந்தது.
நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில் ஆண்கள், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். நீா் நிலைகள் பராமரிப்பு, உடல் ஆரோக்கியம், சமூக ஒற்றுமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய விழிப்புணா்வுக்காக இந்த மாரத்தான் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள், முதலில் வந்த 25 பேருக்கு பதக்கம், முதல் ஐந்து இடங்களைப் பிடித்தவா்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் பரிசு, சான்றிதழ்களை வழங்கினாா்.
சமூக நல அமைப்புகளுடன் இணைந்து மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளையினா் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.