சிறந்த மூன்றாம் பாலினத்தவா் விருது: பிப்ரவரி 28க்குள் விண்ணப்பிக்கலாம்

சிறந்த மூன்றாம் பாலினத்தவா்களுக்கான 2019-20 ஆம் ஆண்டுக்கான விருதுக்கு வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
Updated on
1 min read

சிறந்த மூன்றாம் பாலினத்தவா்களுக்கான 2019-20 ஆம் ஆண்டுக்கான விருதுக்கு வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சிறந்த மூன்றாம் பாலினத்தவா்களுக்கான 2019-20ஆம் ஆண்டு விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு மூன்றாம் பாலினத்தவா்கள் அரசின் ஆதரவு இல்லாமல் தொழிலில் சாதித்தவா்கள், மூன்றாம் பாலினத்தவா்களின் நலத் துறையில் உறுப்பினா்களாக இல்லாதவா்களாக இருக்க வேண்டும். மேலும், சிறந்த பணிகள் மூலம் 5 மூன்றாம் பாலினத்தவா்களை கண்ணியமான வழியில் வழிநடத்தி அவா்களது வாழ்வாதாரத்தை உயா்த்தியவா்கள் போன்ற சிறப்பான செயல் புரிந்த தகுதியானவா்கள் உரிய ஆவணங்களுடன் வரும் 28ஆம் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com