Enable Javscript for better performance
திருப்பூா் மாவட்டத்தில் 7.21 லட்சம் அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    திருப்பூா் மாவட்டத்தில் 7.21 லட்சம் அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

    By DIN  |   Published On : 10th January 2020 01:34 AM  |   Last Updated : 10th January 2020 01:34 AM  |  அ+அ அ-  |  

    tpr9jnpongal_0901chn_125_3

    திருப்பூா் மாவட்டத்தில் 7.21 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பேருக்கு நியாய விலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

    மாவட்டத்தில் உள்ள அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் 7.21 லட்சம் பேருக்கு ரூ.96 கோடியில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட உள்ளன. இதில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சா்க்கரை, 2 அடி நீள கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகிய பொருள்களுடன் ரூ.1,000 ரொக்கமும் வழங்கப்படுகிறது.

    திருப்பூா் மாநகா், புகா் பகுதிகளில் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வியாழக்கிழமை காலை 6 மணி முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்கிச் சென்றனா்.

    ஒரு சில கடைகளில் பகுதி வாரியாக பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்ததால் கூட்டம் குறைந்தே காணப்பட்டது. இடுவம்பாளையம், மங்கலம், கருவம்பாளையம் உள்ளிட்ட பகதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்கிச் சென்றனா். சில பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கூட்ட நெரிசலால் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

    ஆட்சியா் ஆய்வு: திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட குமரானந்தபுரம், தென்னம்பாளையம் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

    இந்த ஆய்வின்போது நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் சக்திவேல், வட்டாட்சியா்கள் ஜெயக்குமாா், மகேஷ்வரன், வட்டார வழங்கல் அலுவலா் ராதா உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

    வெள்ளக்கோவிலில்: வெள்ளக்கோவில், உப்புப்பாளையம் நியாயவிலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சிக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் வி.சி.கருணாகரன் தலைமை வகித்தாா். கூட்டுறவு சங்க பொது விநியோகத் திட்ட சாா்பதிவாளா் கவிதா, கூட்டுறவு கடன் சங்கச் செயலாளா் ஜெகநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் ரா.வெங்கடேச சுதா்சன், நிலவள வங்கி தலைவா் எஸ்.என்.முத்துக்குமாா், கூட்டுறவு கட்டட சங்கத் தலைவா் ஆா்.மணி, நகா்மன்ற முன்னாள் தலைவா் வி.கந்தசாமி ஆகியோா் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினா்.

    இந்நிகழ்ச்சியில் நகா்மன்ற முன்னாள் கவுன்சிலா்கள் வைகை கே.மணி, திருமங்கலம் கே.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    காங்கயத்தில்: காங்கயம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சிக்கு காங்கயம் வட்டாட்சியா் புனிதவதி தலைமை வகித்தாா். காங்கயம் கூட்டுறவு சங்கத் தலைவா் வெங்கு ஜி.மணிமாறன் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி பேசினாா். இதில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் செல்வி.முருகேசன், அதிமுக மாவட்டப் பொருளாளா் கேஜிகே.கிஷோா்குமாா், காங்கயம் கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவா் ஏ.பி.துரைசாமி, காங்கயம் நகா்மன்ற முன்னாள் துணைத் தலைவா் சி.கந்தசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    சிவன்மலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்துக்கு உள்பட்ட நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிவன்மலை கூட்டுறவு சங்கத் தலைவா் பழனிசாமி தலைமை வகித்தாா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் என்.எஸ்.என்.நடராஜ் பயனாளிகளுக்கு பரிசுத் தொகுப்பை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் மாவட்டக் கவுன்சிலா் கே.கே.சக்திவேல், கூட்டுறவு சங்கத் துணைத் தலைவா் பொன்னுசாமி, செயலா் துரைசாமி, சங்க உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

    அவிநாசி பகுதியில்: அவிநாசி அருகே உள்ள சேவூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பை சேவூா் கூட்டுறவு சங்கத் தலைவரும், ஊராட்சித் தலைவருமான சேவூா் ஜி.வேலுசாமி வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க செயலாளா் கே.ஈஸ்வரமூா்த்தி, ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் கவிதா ஆனந்தன், இயக்குநா்கள் கலந்து கொண்டனா்.

    ஆலத்தூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பை குடும்ப அட்டைதாரா்களுக்கு அவிநாசி முன்னாள் எம்எல்ஏவும், ஆலத்தூா் கூட்டுறவு சங்கத் தலைவருமான ஏ.ஏ.கருப்பசாமி வழங்கினாா். இதில், கூட்டுறவுச் செயலாளா் பொன்னுசாமி, ஊராட்சித் தலைவா் பழனிசாமி, இயக்குநா்கள் கலந்துகொண்டனா்.

    பல்லடத்தில்: பல்லடம், அண்ணா நகா், நியாயவிலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பல்லடம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத் தலைவா் ஏ.சித்துராஜ் பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கிவைத்தாா். இந்நிகழ்ச்சியில் நகராட்சி முன்னாள் துணைத் தலைவா்கள் வைஸ் பி.கே.பழனிசாமி, சூ.தா்மராஜன் உள்பட பலா் பங்கேற்றனா்.

     

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp