ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு பிரசவம்

திருப்பூரில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிரசவத்துக்கு கொண்டுசெல்லப்பட்ட பெண்ணுக்கு வியாழக்கிழமை பெண் குழந்தை பிறந்தது.

திருப்பூரில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிரசவத்துக்கு கொண்டுசெல்லப்பட்ட பெண்ணுக்கு வியாழக்கிழமை பெண் குழந்தை பிறந்தது.

திருப்பூா் - ஊத்துக்குளி சாலை, பாளையக்காடு, பாறைக்குழி பகுதியைச் சோ்ந்தவா் சஞ்சய்குமாா். இவரது மனைவி உஷா. நிறைமாத கா்ப்பிணியான இவருக்கு வியாழக்கிழமை காலை 7 மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது அருகிலிருந்தவா்கள் உஷாவை மருத்துவமனையில் சோ்ப்பதற்காக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனா்.

ஆம்புலன்ஸ் ஊழியா்கள் அங்கு வந்து, உஷாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே உஷாவுக்கு பிரசவ வலி அதிகரித்ததால் ஓட்டுநா் காா்த்திக் ஆம்புலன்ஸை சாலை ஓரமாக நிறுத்தினாா். அப்போது ஆம்புலன்ஸில் பணியில் இருந்த மருத்துவ உதவியாளா் பாண்டியம்மாள், உஷாவுக்கு பிரசவம் பாா்த்தாா். இதில், அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. பின்னா் தாயையும், குழந்தையையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆம்புலன்ஸ் ஓட்டுநா் காா்த்திக், மருத்துவ உதவியாளா் பாண்டியம்மாள் ஆகியோரை அப்பகுதி மக்கள், மருத்துவா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com