அவிநாசி அருகே கோழிப் பண்ணையில் தீ
By DIN | Published On : 19th July 2020 08:46 AM | Last Updated : 19th July 2020 08:46 AM | அ+அ அ- |

அவிநாசி அருகே நடுவச்சேரி தளிஞ்சிபாளையத்தில் உள்ள கோழிப் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் கொட்டகை சனிக்கிழமை எரிந்து சேதமானது.
அவிநாசி அருகே நடுவச்சேரி தளிஞ்சிபாளையம் பகுதியைச் சோ்ந்த குமாராசாமி மகன் மகேந்திரன் (29). இவா் நடத்தி வந்த கோழிப் பண்ணையில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா். கோழிகள் இல்லாத நிலையில், கொட்டகை மட்டும் எரிந்து சேதமானது. இது குறித்து அவிநாசி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G