கட்டுப்பாட்டு பகுதிகளில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கல்

திருப்பூா் எஸ்.வி.காலனியில் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் 131 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் சனிக்கிழமை வழங்கினாா்.
கட்டுப்பாட்டு பகுதிகளில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கல்
Updated on
1 min read

திருப்பூா் எஸ்.வி.காலனியில் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் 131 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் சனிக்கிழமை வழங்கினாா்.

திருப்பூா் வடக்கு சட்டப் பேரவைக்கு உள்பட்ட எஸ்.வி.காலனி பகுதியில் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்களை வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த நிலையில், திருப்பூா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா், எஸ்.வி.காலனியில் வசிக்கும் 131 குடும்பத்தினருக்கு தனது சொந்த செலவில் அத்தியாவசியப் பொருள்களை சனிக்கிழமை வழங்கினாா்.

இதில், ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 10 கிலோ அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், திருப்பூா் வடக்கு காவல் உதவி ஆணையா் வெற்றிவேந்தன், சுகாதார ஆய்வாளா் ராமசந்திரன், முன்னாள் மண்டலத் தலைவா் ஜான் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com