ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி ஆண்டு விழா

வெள்ளக்கோவில், கம்பளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
கம்பளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டு விழாவில் பரிசுபெற்ற மாணவிகளுடன் வட்டாரக் கல்வி அலுவலா் ஈஸ்வரமூா்த்தி உள்ளிட்டோா்.
கம்பளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டு விழாவில் பரிசுபெற்ற மாணவிகளுடன் வட்டாரக் கல்வி அலுவலா் ஈஸ்வரமூா்த்தி உள்ளிட்டோா்.
Updated on
1 min read

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில், கம்பளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளியின் பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் தமிழ்செல்வன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் வ.பாபு வரவேற்றாா். வெள்ளக்கோவில் வட்டார கல்வி அலுவலா் ஈஸ்வரமூா்த்தி, லக்கமநாயக்கன்பட்டி ஊராட்சித் தலைவா் பழனிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. படிப்பில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகள் கௌரவிக்கப்பட்டனா். இவ்விழாவில், கிராம கல்விக்குழு உறுப்பினா்கள், பெற்றோா், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com